கார் மோதி பேருந்து நிறுத்தத்தில் நின்ற 3 பேர் பலி..!!

திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே கார் கவிழ்ந்து மோதியதில், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 3 பேர் உயிரிழந்தனர். பாலப்பம்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் சதாசிவம் (75), ரங்கசாமி (62) மற்றும் மோகன்ராஜ் (50) ஆகியோர் பலியாகினர். பழனியில் இருந்து கேரளா நோக்கி சென்ற கார் கவிழ்ந்து, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் மீது மோதியது. கேரளா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது நிகழ்ந்த விபத்தில், காரில் இருந்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

 

The post கார் மோதி பேருந்து நிறுத்தத்தில் நின்ற 3 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: