இந்த உத்தரவை எதிர்த்து, நித்யானந்தா சார்பில் அதிகாரம் பெற்ற நித்யா, கோபிகா ஆனந்த் என்ற உமாதேவி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘உமாதேவிக்கு வழங்கப்பட்டுள்ள பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளதால், நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும். அவரை ஆஜராக சொல்லுங்கள்’ என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கூறினார்.
இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல’ என்றார். இதைக்கேட்ட நீதிபதி, ‘நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று தெரிய வேண்டும். காணொலி காட்சி மூலம் ஆஜராக சொல்லலாம்’ எனத் தெரிவித்தார். இதற்கு மனுதாரர் தரப்பில், ‘அவர் ஆஜராக இயலாது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ‘மடங்களை நிர்வகிக்க தக்கார் நியமித்து அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், ‘நித்யானந்தாவின் ஆன்மிக உரைகள் சிறப்பானவை. அவரது ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. காஞ்சி பெரியவர் கூறியது போல, சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும்’ என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.
The post நித்யானந்தா எங்கே? ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.