மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

டெல்லி: மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உறுதி செய்யும் விவகாரத்தில் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் டிஜிபிகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் அபூர்வா சந்திரா கடிதம் எழுதியுள்ளார். மருத்துவமனைகள், அதிக அபாயம் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதோடு, அவை முறையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். “சுகாதார பணியாளர்களுக்கு எதிராக விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் குடியிருப்பு வாசிகள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய உள் பாதுகாப்பு குழுக்களை உருவாக்க வேண்டும்.

The post மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: