பெங்களூரு: மூடா வழக்கில் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி, அமலாக்கத்துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (மூடா) வீட்டுமனைகள் சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வழக்கில் இருந்து விடுவித்த மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தின் நடவடிக்கையை எதிர்த்து, தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சினேகமயி கிருஷ்ணா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு மீது விளக்கம் அளிக்க முதல்வர் சித்தராமையா உள்பட பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம் அவசர நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
