மாநில பாடத்திட்டம் தரமற்றது என்று தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ஆகியவை ஆழமாக ஆய்வுசெய்து விவாதித்து, தனது தீர்ப்பில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டம் தரமற்றது என்ற வாதத்தை நிராகரித்து, மாநில பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. எந்த வகையான போட்டித் தேர்வுகளையும் எதிர் கொள்ளும் உள்ளடக்கம் கொண்டதாக பாடநூல்கள் மாநில அரசால் தயாரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், மாணவர்கள் இடையே ஆளுநர் பேசியுள்ளது, அடிப்படை ஆய்வு இல்லாத, அவதூறு பரப்பும் உரையாகும். மன ரீதியாகவும், அதன் விளைவாக உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிப்பு அடையும் வகையில் பேசப்பட்ட பேச்சு கண்டனத்துக்குரியது. அதனால் மாநில பாடத்திட்டம் குறித்து அவர் ெதரிவித்த கூற்றை அவர் திரும்பப் பெற வேண்டும் அல்லது ஆளுநர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post மாநில பாடத்திட்டம் குறித்த விமர்சனம் ஆளுநர் ரவி பேச்சுக்கு கடும் கண்டனம்: பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு அறிக்கை appeared first on Dinakaran.