காலாவதி டோல்கேட் அகற்றாவிட்டால் டெல்லி முற்றுகை: விக்கிரமராஜா பேட்டி

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் சங்க பலகை, கொடியேற்று நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் விக்கிரமராஜா அளித்த பேட்டியில்,
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட விதிகளை மாற்ற வேண்டும். காலாவதியான டோல்ேகட்களை அகற்றுவோம் என சொல்லி ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் அகற்றவில்லை. எத்தனை ஆண்டுகளில் அகற்றப்படும் என்பதை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் டெல்லியை நோக்கி முற்றுகை போராட்டத்தை கையில் எடுப்போம். டோல்கேட் கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒன்றிய அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளோம் என்றார்.

The post காலாவதி டோல்கேட் அகற்றாவிட்டால் டெல்லி முற்றுகை: விக்கிரமராஜா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: