5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர், ஆக. 28: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கிறது.
கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் கலெக்டர் தலைமை வகிக்கிறார். மாவட்ட அளவிலும், கோட்ட அளவில் ஆர்.டி.ஒக்கள் தலைமை வகிக்கின்றனர். திருவாரூர் மற்றும் மன்னார்குடியிலும் நடத்தப்படும்.

திருவாரூர் மாவட்ட அளவிலான விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 10.30 மணியளவில் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதில் விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். மேற்படி, கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம். இதில் விவசாயிகள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

The post 5 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: