புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள்

தர்மபுரி, ஆக.2: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சி பி.மோட்டுப்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க புதிதாக குழாய் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். பணிகளை விரைவில் முடித்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் எம்எல்ஏ அறிவுறுத்தினார். பின்னர், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, ஒன்றிய துணை செயலாளர் மோகன், சண்முகம், முனுசாமி, சங்கர், காளியப்பன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: