இதுகுறித்து புகாரின்படி வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். தகவல் அறிந்து எஸ்பி மணிவண்ணன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மருத்துவமனை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பிரசவ வார்டில் புகுந்த பெண், கட்டைப் பையுடன் வெளியே செல்வது பதிவாகியிருந்தது. அவருடன் ஒரு சிறுவனும் நடந்து சென்றுள்ளான். அந்த பெண் பையில் குழந்தையை வைத்து கடத்தி சென்றிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன்பேரில், அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தையை பையில் வைத்து கடத்தி சென்ற பெண்: சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் வலை appeared first on Dinakaran.