திருமலையில் தங்கும் அறை தருவதாக போலி வெப்சைட் மூலம் பக்தர்களிடம் நூதன மோசடி: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: பாஞ்சஜன்யம் என்ற பெயரில் போலி வெப்சைட் முகவரியில் இணையதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. அதில் 92535 60523 என்ற மொபைல் எண் வழங்கியுள்ளனர். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் ஆங்கிலம் அல்லது இந்தியில் பேசும்படி கூறுகிறார்கள். ஏழுமலையான் கோயிலுக்கு அருகாமையிலேயே இந்த கெஸ்ட் ஹவுஸ் உள்ளதாகவும் ஏசி அறைகள் ₹1,650க்கும், ஏசி அல்லாத அறைகள் ₹1,250க்கும் வழங்கப்படுவதாக கூறி ஆன்லைனில் பக்தர்களிடம் பணம் வசூலிக்கின்றனர். பின்னர் பணம் செலுத்திய ஸ்கிரீன்ஷாட்டை காண்பித்தால் ரசீது அனுப்புவதாகவும் அதனை திருமலைக்கு வந்து காண்பித்து அறைகளை பெற்று கொள்ளலாம் எனவும் நூதனமுறையில் சில கும்பல் ஏமாற்றி வருகிறது.

பக்தர்கள் யாரும் அந்த போலி வெப்சைட்டை அணுகாமல் திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். இதனிடையே அந்த வெப்சைட் குறித்து விஜிலென்ஸ் மற்றும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த கும்பலிடம் பக்தர்கள் யாரேனும் பணம் அனுப்பி ஏமாந்தார்களா? எனவும் விசாரிக்கின்றனர்.

The post திருமலையில் தங்கும் அறை தருவதாக போலி வெப்சைட் மூலம் பக்தர்களிடம் நூதன மோசடி: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: