காரைக்குடி: விடுதியில் தங்கி படித்து வந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தங்கியிருந்த விடுதி உரிமையாளரின் உறவினர் ராஜமாணிக்கம் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் ராஜமாணிக்கத்தை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.