காதல் மனைவி கர்ப்பிணியாக உள்ள நிலையில் மாணவியை பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற காதலன்: ஆந்திராவில் பயங்கரம்

திருமலை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பத்வேல் ராமாஞ்சநேய நகரை சேர்ந்தவர் விக்னேஷ்(19), இவரும் 17 வயது இன்டர்மீடியட் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விக்னேஷ் வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், விக்னேஷ் மனைவியுடன் கடப்பா நகரில் வசித்து கொண்டே மாணவியுடனும் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ், போன் மூலம் மாணவியை தொடர்பு கொண்டு, வெளியே செல்லலாம் என அழைத்துள்ளார். அதன்படி வந்த வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற விக்னேஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவரது கழுத்தை நெரித்து கீழே தள்ளி பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடினார்.

அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மாணவி அலறல் சத்தம் கேட்டு கொடுத்த தகவலின்படி போலீசார் மாணவியை மீட்டு பத்வேல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடப்பா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 1 மணிக்கு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

இறப்பதற்கு முன்பு மாணவி கொடுத்த வாக்குமூலத்தின்படி விக்னேஷை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், காதல் மனைவி கர்ப்பிணியாக உள்ள நிலையில், சிறு வயது முதலே காதலித்த மாணவி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததால், அவரை திட்டமிட்டு வரவழைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது.

The post காதல் மனைவி கர்ப்பிணியாக உள்ள நிலையில் மாணவியை பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற காதலன்: ஆந்திராவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: