தண்ணீரில் விஷமாத்திரை கலந்து கொடுத்து 2 குழந்தைகளை தூக்கிட்டு கொன்று போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை: வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு என சந்தேகத்தால் விபரீதம்

சேலம்: சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் கோவிந்தராஜ் (38). சேலம் அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேசனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா (34), இவர்களது குழந்தைகள் ரோகித் (7), தர்ஷிகா(5). நெய்க்காரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ரோகித் 3ம்வகுப்பும், தர்ஷிகா எல்கேஜியும் படித்து வந்தனர். நேற்று முன்தினம் காலையில் கோவிந்தராஜ் வேலைக்கு சென்றுவிட்டார். மனைவி சங்கீதாவின் சகோதரர் விமல்குமார் சகோதரியை செல்போனில் அழைத்துள்ளார்.

ஆனால் செல்போன் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதுகுறித்து கோவிந்தராஜிடம் தெரிவித்துள்ளார். அவர் அவசரமாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது, 2 குழந்தைகளும் இறந்து கிடந்தனர். மனைவி சங்கீதா அருகில் தூக்கில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து சென்று தாய் மற்றும் 2 குழந்தைகளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், 2 குழந்தைகளுக்கு விஷ மாத்திரைகளை குடிநீரில் கரைத்து கொடுத்து தூக்கில் தொங்கவிட்டு கொன்று, அதன்பிறகு சங்கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இதுதொடர்பாக ஏட்டு கோவிந்தராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த 3 மாதமாகவே ஏட்டு கோவிந்தராஜூக்கும், மனைவி சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அதே நேரத்தில் கோவிந்தராஜீக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என சங்கீதாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகம் அதிகமானதால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கீதா தனது குழந்தைகளை கொன்று தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மனைவி, குழந்தைகள் இறந்ததால் கோவிந்தராஜூம் நேற்று 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை போலீசார் காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post தண்ணீரில் விஷமாத்திரை கலந்து கொடுத்து 2 குழந்தைகளை தூக்கிட்டு கொன்று போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை: வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு என சந்தேகத்தால் விபரீதம் appeared first on Dinakaran.

Related Stories: