தினக்கூலி முறையை கைவிட்டு மாதச் சம்பளம் வழங்க வேண்டும்: கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சம வேலைக்கு, சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் சங்கம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு டெங்கு கொசு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் (DBC – Dengue Breeding Checkers) தமிழகம் முழுவதும் சுமார் 38,000 பேர் தினக் கூலி அடிப்படையில் பணி‌யாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு நகராட்சி, பேரூராட்சிகளில் தினக்கூலியாக ரூ.200, ரூ.250, ரூ.300, ரூ.440 வரை மாறுபட்ட ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த குறைந்த சம்பளமும் கூட மிக‌த் தாமதமாக பல மாதங்கள் கழித்து வழங்கப்படுகிறது. எனவே, தினக்கூலி முறையை கைவிட்டு, குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 21,000 வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தினக்கூலி முறையை கைவிட்டு மாதச் சம்பளம் வழங்க வேண்டும்: கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: