புதுக்கோட்டை அருகே டயர் வெடித்து 2 கார்கள் ேமாதல் : தந்தை, மகள் பலி: தாய், மகன் படுகாயம்


விராலிமலை: மதுரை வரதராஜூ சாலையை சேர்ந்த முத்துவேல் மகன் முருகன்(40). இவர் தனது காரில் மனைவி சவுமி(34), மகன் வருண் கார்த்திக்(11), மகள் தியா(6) ஆகியோருடன் திருச்சிக்கு வந்து விட்டு மீண்டும் நேற்று முன்தினம் இரவு விராலிமலை வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார். காரை முருகன் ஓட்டினார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கொடும்பாளூர் அடுத்த இடையபட்டி அருகே சென்ற போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு கட்டையை தாண்டி மறுபுறம் சாலைக்கு சென்றது.

அப்போது மதுரையில் இருந்து திருச்சிக்கு நாகராஜன் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு கார் மீது முருகனின் கார் பயங்கரமாக மோதியது.இதில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது. இதனால் முருகன்(40), அவரது மனைவி, மகள், மகன் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த தியா வழியிலேயே உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த முருகன் சிறிது நேரத்தில் இறந்தார். படுகாயம் அடைந்த சவுமி, வருண் கார்த்திக் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post புதுக்கோட்டை அருகே டயர் வெடித்து 2 கார்கள் ேமாதல் : தந்தை, மகள் பலி: தாய், மகன் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: