வாக்களிக்கவில்லை என்றால் ராமனே ஆனாலும் பாஜ கைகழுவி விடும்: மதுரை எம்.பி அதிரடி

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்திய மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அளித்த பேட்டி: அயோத்தியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த அவ்தேஷ் பிரசாத், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று உள்ளார். மத வெறி அரசியல் குறியீடாக அயோத்தியை 20 ஆண்டுகளுக்கு மேலாக மீண்டும் மீண்டும் பாஜ சொல்லி வந்தது.

பிரதமர் பேச்சில், அயோத்தியில் ஆயிரம் ஆண்டு இருளை நீக்கி விட்டதாக கூறினார். இந்த தேர்தலுக்கு பிறகான குடியரசு தலைவர் உரையில், அயோத்தி என்ற வார்த்தையை மோடி பேசவில்லை. வாக்களிக்கவில்லை என்றால், ராமனே ஆனாலும் பாஜ கை கழுவி விடும். அயோத்தியில் வெற்றி பெற்ற அவ்தேஷ் பிரசாத், நாடாளுமன்ற அவையில் மோடிக்கு நேர் எதிரில் அமர்ந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

The post வாக்களிக்கவில்லை என்றால் ராமனே ஆனாலும் பாஜ கைகழுவி விடும்: மதுரை எம்.பி அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: