தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்கள்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் முன்பதிவு நேற்று தொடங்கியது. தென் மாவட்ட ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் விரும்புவதால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும். நெரிசலை தவிர்க்க பலரும் டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் புக்கிங்க் செய்துவிடுவர். அந்த வகையில், தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.

ரயில்களை பொறுத்தவரை 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ம் தேதி வருகிறது. அன்றைய தினம் வியாழக்கிழமை ஆகும். எனவே தீபாவளிக்கு முந்தைய நாட்களில், அதாவது அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் பலரும் திட்டமிடுவார்கள்.

அந்த வகையில், அக்டோபர் 28 ம் தேதிக்கான (திங்கள்) முன்பதிவு நேற்று தொடங்கியது. இந்த முன்பதிவு தொடங்கியதில் இருந்தே டிக்கெட்டுகள் வேகமாக விற்று வருகின்றன. பல ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் காட்டிவிட்டது. வழக்கமாக பயணிகள் கூட்டம் அலைமோதும் தென் மாவட்ட ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இதனால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயிலை இயக்க வேண்டுமென இப்போதே வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்கள் appeared first on Dinakaran.

Related Stories: