இதனிடையே காயமடைந்து சிகிச்சையில் இருக்கும் மதுமதிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு எலும்பு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சிகிச்சையில் இருக்கும் மதுமதி, மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் சிரமப்பட்டு வருகிறார். இதனால் தனது மருத்துவ செலவிற்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் கே.பி.சங்கர் எம்எல்ஏ, மதுமதியின் மருத்துவ செலவிற்காக ரூ.1 லட்சம் நிதியை அவரது குடும்பத்தாரிடம் நேற்று வழங்கினார்.
The post மாடு முட்டி காயமடைந்த பெண்ணின் மருத்துவ செலவுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.