இதில், வெள்ளியூர் கிராமத்தில் சாலையின் ஓரத்தில் மாணவர் விடுதி முன்பு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறை சார்பில் மழை நீர்வடிகால்வாய் கட்டப்பட்டது. அப்போது கால்வாயின் மேல், சிமென்ட் சிலாப்பாலான மூடிகள் போடப்பட்டது. ஆனால் இந்த மூடிகளில் விடுதியின் முன்பு உள்ள மூடி மட்டும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு லேசான ஓட்டை ஏற்பட்டது. பின்னர், தற்போது பெரிய அளவில் பள்ளமாக மாறிவிட்டது. இதனால் மாணவர்கள் விடுதிக்கு செல்லும்போது அச்சத்துடன் செல்கிறார்கள், இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த பள்ளத்தில் விழுந்து அடிபடுகிறார்கள். இந்த பள்ளத்தை மூடி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post அரசு ஆதி திராவிட நல மாணவர் விடுதி முன்பு பெரிய பள்ளம்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.