அதன்படி தினமும் இயக்கப்படும் இலங்கை-சென்னை 2 வருகை விமானங்கள், சென்னை-இலங்கை 2 புறப்பாட்டு விமானங்கள் என மொத்தம் 4 விமானங்கள் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்களில் இலங்கை செல்லும் பயணிகள் மட்டுமின்றி, இலங்கை வழியாக மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்லும் டிரான்சிட் பயணிகளும் செல்வார்கள். திடீரென இந்த 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிர்வாக காரணங்களால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த விமானங்களில் பயணிக்க வேண்டிய பயணிகள் வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
The post சென்னை-இலங்கை இடையேயான 4 விமான சேவைகள் திடீர் ரத்து: பயணிகள் கடும் அவதி appeared first on Dinakaran.