குழந்தைக்கு வரும் 24ம் தேதி (நாளை) பிறந்தநாள். அதனால், அந்த பிறந்தநாளில் பிரேம்குமார் கலந்துகொள்ள அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என்று கோரினார். இதற்கு மாலா தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவில், மனுதாரர் மற்றும் அவரது குழந்தையின் தந்தை, தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி மற்றும் மற்ற உறவினர்கள் ஜூன் 24ம் தேதி குடும்பநல நீதிமன்றத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு காலை 11 மணிக்கு வந்து குழந்தைக்கு பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாடலாம். இந்த நிகழ்ச்சியை கவனிக்க தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் செயலர் வாலண்டியர்களை நியமிக்க வேண்டும். நிகழ்வு குறித்து 26ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post குழந்தையை பார்க்க விவாகரத்து பெற்ற கணவருக்கு அனுமதி மறுப்பா? குடும்பநல நீதிமன்றத்தில் குழந்தையின் பிறந்த நாளை கொண்டாட வேண்டும்: உயர்நீதிமன்றம் வித்தியாசமான உத்தரவு appeared first on Dinakaran.