இரு தரப்பு மோதலில் 4 வாலிபர்கள் கைது

சேந்தமங்கலம், ஜூன் 18: புதுச்சத்திரம் அடுத்த பிள்ளநல்லூர் கல்லாங்குத்து பகுதியைச் சேர்ந்தவர் கிரிசங்கர் (24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (28) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம், இருவருக்கும் அதே பகுதியில் உள்ள டீக்கடை முன் தகராறு ஏற்பட்டது. அப்போது கிரிசங்கர் அவரது நண்பர் தமிழ்ச்செல்வன் (23), சுரேஷ், அவரது நண்பர் இந்திரகுமார் (21) ஆகியோர் சரமாரியாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், புதுசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து கிரிசங்கர், சுரேஷ், தமிழ்செல்வன், இந்திரகுமார் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரு தரப்பு மோதலில் 4 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: