தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்து விவசாயி பலி

திருமங்கலம், ஜூன் 14: திருமங்கலம் அருகே தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயி பாம்பு கடித்ததில் உயிரிழந்தார். மங்கலம் அருகே அய்யபம்ட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை(54). விவசாயியான இவர், நேற்று முன்தினம் இவரது மனைவியுடன் சேர்ந்து கிராமத்திலுள்ள அவரது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பாம்பு திடீரென மச்சக்காளையை கடித்துள்ளது. இதனால் மயக்கம் வருவதாக அவர் கூறியுள்ளார். தையடுத்து அவரது மனைவி வயல்வெளியில் பணி செய்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து மச்சக்காளையை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே மச்சக்காளை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மகன் சிவதரன் கொடுத்த புகாரின் பேரில் சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்து விவசாயி பலி appeared first on Dinakaran.

Related Stories: