ஆழ்வார்தோப்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

வைகுண்டம், ஜூன் 20: ஆழ்வார்தோப்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு, கொசுப்புழு ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் கிராம உதயம் நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் தலைமையில் நடந்தது. தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்றார். முகாமில் கிராம உதயம் நிர்வாக இயக்குநர் சுந்தரேசன், டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தன்னார்வ தொண்டர்கள் முத்துச்செல்வன், விஜயகுமாரி சந்திரமதி, லிஜியா, ஆனந்தசெல்வன், மகளிர் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆழ்வார்தோப்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: