போராட்டம்

குஜிலியம்பாறை, ஜூன் 7: பாளையம் பேரூராட்சி பொம்மாநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செத்தக்கம்மாள். இவரது பெயரில் இருந்த 44 சென்ட் நிலத்தை, மற்றவர்கள் பெயரில் பட்டா போட முயன்றுள்ளனர். இதனால், அவரது பேத்தி சின்னக்கம்மாள் என்பவர், 2017ல் பழநி ஆர்டிஓ.விடம் முறையிட்டதை தொடர்ந்து, ஆர்டிஓ தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலம் சம்பந்தமாக வேறு யாருக்கும் பதிவு செய்யக்கூடாது என தடை மனு 2021ல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிலத்தை வேறு நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ய இருந்ததாக தெரிகிறது. இதை அறிந்த சின்னக்கம்மாள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் குஜிலியம்பாறை பத்திரப்பதிவு அலுவலத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: