மேலும் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் தலைமையில் ஏராளமானோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் ரெ.தங்கம் தலைமையில் மாநில பொருளாளர் எஸ்.நசீம், வீர.சரவணன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருச்சிலைக்கும் மலர் மாலைகள் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னதாக கலைஞரின் கோபாலபுரம் மற்றும் சிஐடி காலனி இல்லத்திற்கு நேரில் சென்று கலைஞரின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞரின் திருவுருவச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர், கோடம்பாக்கம் முரசொலி வளாகத்தில் உள்ள கலைஞர் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணங்கினார்.
அங்கு தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் என்ற சிறப்பு மலரினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முரசொலி செல்வம் பெற்றுக் கொண்டார். கலைஞர் பிறந்தநாளை ஒட்டி நேற்று தமிழகம் முழுவதும் திமுகவின் கிளை கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கலைஞரின் திருவுருவப் படம் வைத்து கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். தமிழகம் முழுவதும் திமுக மூத்த முன்னோடிகளுக்குப் பொற்கிழிகள் வழங்கப்பட்டன. ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி ெதாகை, நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ முகாம்கள், விளையாட்டு போட்டிகள் என தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
The post 101வது பிறந்தநாள் கொண்டாட்டம் கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.