மனைவியை மிரட்டிய கணவர் மீது வழக்கு

 

ஆண்டிபட்டி, ஜூன் 1: வருசநாடு கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வம்(44). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நாகலட்சுமி (33), என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் வருசநாட்டில் தனிக்குடித்தனம் சென்றனர்.

இந்நிலையில் மதுபழக்கம் உள்ள வெற்றிச்செல்வம் வீட்டு செலவுக்கு பணம் கேட்கும் மனைவியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாகலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசார் வெற்றிச்செல்வம் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post மனைவியை மிரட்டிய கணவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: