இங்கிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீா் கோதையாற்றில் கலந்து பேச்சிப்பாறை அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். பேச்சிப்பாறை அணை உபரிநீரால், குழித்துறை தாமிரவருணியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. நீா்நிலைகளில் பொதுமக்கள் குளிக்கவோ, கால்நடைகளைக் குளிப்பாட்டுவதற்காக இறங்கவோ கூடாது என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
The post கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை..!! appeared first on Dinakaran.