நத்தம் பகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு

நத்தம், மே 20: நத்தம்-பிள்ளையார்நத்தம் சாலையை அகலப்படுத்தும் பணி முடிந்த நிலையில் அந்தப் பணியின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை நத்தம் உட்கோட்ட பகுதியில் நத்தம் – பிள்ளையார்நத்தம் சாலையில் சுமார் 2.8 கி.மீ. தொலைவு சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி நடைபெற்றது.

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் (2023-24) நடைபெற்ற இந்தப் பணியின் தரம் குறித்து திருச்சி நபார்டு கிராம சாலைகள் நெடுஞ்சாலை அலகின் கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா, மதுரை கோட்டப் பொறியாளர் சந்திரசேகர், திண்டுக்கல் உட்கோட்ட உதவி பொறியாளர் பொன்னுவேல் ஆகியோர் நேரில் ஆய்வுசெய்து, உள் தணிக்கை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) நத்தம் உதவி கோட்ட பொறியாளர் பாலகிருஷ்ணன், திண்டுக்கல் தரக் கட்டுப்பாடு உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் மைதிலி மற்றும் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர்கள, இளநிலை பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

The post நத்தம் பகுதியில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: