அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சூளகிரி, மே 14: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்த 2012-13ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி குழு துணைதலைவர் ஷேக் ரஷீத் மற்றும் 200க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் கணேசன், தனக்குமார், மீனாட்சிசுந்தரம், அம்சவேணி, ஜீவிதா, பூவரசி, நீவிவேதா, சந்தன், ஆசிரியர் கழக தலைவர் ராமன் துணை தலைவர் ஷானு, பொருளாளர் அஷ்பர், மற்றும் நிர்வாகிகள் சேகர், சுதாகர், ஜெபஸ்றின் மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் குமார், லோகநாதன், ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்று நடுவோம், சுகாதாரத்தை பேணிக் காப்போம் என தீர்மானம் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும், ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.

The post அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: