கஞ்சா விற்றவர் கைது ஒரு கிலோ பறிமுதல்

ஊத்தங்கரை, ஜூன் 2: ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்கு வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட கலால் டிஎஸ்பி சிவலிங்கம் தலைமையில் போலீசார், நேற்று ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சந்துரு என்பவரை கைது செய்த போலீசார், அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்றவர் கைது ஒரு கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: