நாகர்கோவிலில் டெப்போ முன் பி.எம்.எஸ். ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,மே 4: குமரி மாவட்டத்தில் டவுன் பஸ்களை பகுதி நேர பஸ்களாக மாற்றி இயக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். 12 மணி நேரம் வேலை செய்ய டிரைவர்கள், கண்டக்டர்களை நிர்பந்திக்க கூடாது. அரசு பஸ்கள் பழுதானால் ஏற்படும் தட முடக்கத்திற்கு ஓட்டுனர், நடத்துனர்களின் வருகை பதிவை குறைக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணி தோட்டம் டெப்போ முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் நடேசன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் சசி, துணை பொது செயலாளர் விஜய கோபாலன், பொருளாளர் பிரேம்குமார், பேரவை செயலாளர் சதீஷ்குமார் உட்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post நாகர்கோவிலில் டெப்போ முன் பி.எம்.எஸ். ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: