பள்ளி வாசலில் நீர் மோர் விநியோகம்

 

கோவை, மே 4: கோவையில் கடந்த சில வாரங்களாக கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் நகரின் முக்கிய இடங்களில் நீர்மோர் பந்தல் அமைத்து உள்ளனர். இந்நிலையில், கோவை அத்தார் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் நேற்று நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளி வாசலுக்கு தொழுகைக்கு வந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் நீர்மோர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.

இதனை பொதுமக்கள், குழந்தைகள் என பலர் குடித்து மகிழ்ந்தனர். இதில், தலைவர் அமானுல்லா, செயலாளார் பீர்முகமது, பொருளாளர் பக்கீர் முகமது, முத்தவள்ளி ஜாபர் அலி, துணைத் தலைவர்கள் சையது, உசேன் சாகுல் ஹமீத், கமிட்டி உறுப்பினர்கள் ஆஷிக் அகமது, முகமது யூசுப், நிஜாமுதீன், முகமது இப்ராஹிம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

The post பள்ளி வாசலில் நீர் மோர் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.