பெண்ணிடம் நகை திருடியவர் கைது

கோவை. ஜூன் 22:கோவை அருகே உள்ள வீரகேரளம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மலர்க்கொடி (62). சமையல் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மலர்க்கொடி வீட்டு செலவுக்காக 2 பவுன் தங்க செயினை அடகு வைக்க டவுன்ஹால் பகுதிக்கு செல்ல மருதமலை தேவஸ்தானம் பள்ளி பஸ்நிறுத்தம் அருகில் காத்திருந்தார்.

அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த வாலிபர் திடீரென அவரது நகை இருந்த பையை எடுத்துகொண்டு மாயமாகிவிட்டார். இதுகுறித்து மலர்கொடி அளித்த புகாரின்பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர்க்கொடியிடம் செயினை திருடி சென்ற வாலிபரை தேடி வந்தனர். இதனையடுத்து நகை திருடிய சுதாகர் (42) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

The post பெண்ணிடம் நகை திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.