சோமனூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் குண்டாசில் கைது

சோமனூர், ஜூன் 22: மதுரை மாவட்டம் கீழநாச்சிகுளம், வடக்கு தெருவை சேர்ந்தவர் மாலிக் பாஷா (26). தற்போது, சோமனூர் செல்வபுரம் காலனி பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவதாக கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அங்கு பதுங்கி இருந்த மாலிக்பாஷாவை பிடித்து விசாரித்ததில் இவர் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டது குறித்து மங்கலம், அனுப்பர்பாளையம், கருமத்தம்பட்டி உள்ளிட்ட காவல் நிலையத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது தெரியவந்தது.

கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார்பாடி உத்தரவின் அடிப்படையில் மாலிக்பாஷாவை நேற்று குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தனியார் பள்ளிகள் யோகாவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசு பள்ளி மாணவர்களிடம் யோகா கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தாலும், பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் எடுப்பதில்லை. நீட் போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நிலையில் யோகா பயிற்சி மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்க வழி செய்யும்.

The post சோமனூரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.