தேஜஸ் போர் விமான விபத்தை இந்திய விமான படையும் உறுதி செய்துள்ளது. மேலும் விபத்து குறித்த காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாவது இதுவே முதல் முறையாகும். ராஜஸ்தானின் பொக்ரான் பாலைவனத்தில் முப்படைகளின் ஒருங்கிணை ராணுவ பயிற்சி பாரத் சக்தியை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். ராணுவ உயரதிகாரிகள் பலர் இதில் கலந்து கொண்டனர். இங்கிருந்து 100கி.மீ. தொலைவில் தான் தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது.
The post ராஜஸ்தானில் தேஜஸ் போர் விமானம் விழுந்து விபத்து appeared first on Dinakaran.