மேலும் பேருந்தை பின்னோக்கி தள்ள முயன்றது. இதைப்பார்த்து பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து யானை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் சென்று விட்டது. அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதில் ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், யானை வழிமறித்த தமிழக அரசு பேருந்தின் முன்புறம் படையப்பா என ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது. படையப்பா என எழுதப்பட்ட அரசுப் பேருந்தை படையப்பா யானை வழிமறிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The post ‘படையப்பா’ அரசு பேருந்தை மறித்து உடைத்தது படையப்பா: மூணாறு மலைச்சாலையில் பயணிகள் பதற்றம் appeared first on Dinakaran.