கோவை மாநகரில் ரூ.1.01 கோடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை வளாகம்

 

கோவை, மார்ச் 1: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 46-வது வார்டுக்கு உட்பட்ட ரத்தினபுரி, கணபதி நஞ்சப்பன் வீதியில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த குழங்தைகள் மேம்பாட்டு சேவை வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மண்டல தலைவர் மீனா லோகு வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, இம்மையத்தை திறந்துவைத்தார்.

இந்த வளாகத்தில் மொத்தம் 6 மையங்கள் உள்னள. இதன் வாயிலாக, ரத்தினபுரி, கணபதி, நஞ்சப்பன் வீதி, சாயிபாபாகாலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 120 குழந்தைகள் பயன்பெறுகின்றன. திறப்பு விழாவில், எல் அண்ட் டி எம்பிடிஏ மிசைல் சிஸ்டம்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாகி ரவி கட்டாரியா, நிர்வாக தலைவர் அமுல்கேத்திரா, ஒருங்கிணைந்த குழங்தைகள் மேம்பாட்டு சேவைகள் மாவட்ட திட்ட அலுவலர் முருகேஸ்வரி, குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர்கள் கவிதா பப்பி, ஆண்டாள், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி பொறியாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post கோவை மாநகரில் ரூ.1.01 கோடியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை வளாகம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.