திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 55ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 2 நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் வேலாயுதம், பேரூர் செயலாளர் தினேஷ் குமார், ஒன்றிய செயலாளர் செல்வம், பேருராட்சி கவுன்சிலர்கள் நரசிம்மன், மணிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் சேகர், புகழ், ரவி, துரை, சுப்பிரமணி உள்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: