திருத்துறைப்பூண்டி அரசு பள்ளிகளில் புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

திருத்துறைப்பூண்டி, பிப். 2: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு திருவாரூரில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழா குறித்து விழிப்புணர்வு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு திருத்துறைப்பூண்டி தாசில்தார் கார்ல் மார்க்ஸ் தலைமை வகித்தார்.

புத்தக வாசிப்பு குறித்து நூலகர் ஆசைத்தம்பி மாணவ, மாணவிகள் எடுத்துக் கூறினார். மாநில அளவில் இலக்கிய திருவிழாவில் வெற்றிப் பெற்ற மாணவர்களை பாராட்டி ராய் ட்ரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனர் துரை ராயப்பன் பரிசளித்தார். மேலும் திருவாரூரில் பிப்.11ம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழா கலை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கில் பெருந்திரளாக பள்ளி மாணவர்களை கலந்து கொள்ள செய்வதாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதியளித்தனர். முடிவில் அந்தந்த பள்ளி தலைமையாசிரியைகள் நன்றி கூறினார்கள்.

The post திருத்துறைப்பூண்டி அரசு பள்ளிகளில் புத்தக திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: