சாலை விபத்தில் இறந்த மருந்து விற்பனை பிரதிநிதியின் கண்கள் ஜிஹெச்சுக்கு தானம்

தூத்துக்குடி, மே 26: தூத்துக்குடியில் சாலை விபத்தில் உயிரிழந்த மருந்து விற்பனை பிரதிநிதியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் சின்னராஜா மகன் அன்பு ஆனந்த் (28). மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் வந்த அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்ட இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே உயிரிழந்த அன்பு ஆனந்தின் கண்களை அவரது பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு தானமாக அளிக்க முடிவு செய்தனர். அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அன்பு ஆனந்தின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இதையடுத்து கண் மருத்துவ நிபுணர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து கண் வங்கிக்கு அனுப்பிவைத்தனர்.

 

The post சாலை விபத்தில் இறந்த மருந்து விற்பனை பிரதிநிதியின் கண்கள் ஜிஹெச்சுக்கு தானம் appeared first on Dinakaran.

Related Stories: