விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அழைப்பு ஆளுரை கண்டித்து சென்னையில் பேரணி திருவாரூரில் மாணவர் சங்கம் பிரச்சாரம்

திருவாரூர்: தமிழக ஆளுநரை கண்டித்து நாளை மறுதினம் சென்னையில் நடைபெறும் பேரணியை விளக்கி திருவாரூரில் நேற்று மாணவர் சங்கத்தினர் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை கண்டித்தும், நீட் தேர்விலிருந்து விலக்கு மற்றும் 2020 தேசிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேசம், கல்வி மற்றும் ஜனநாயகத்தை பாதுக்காத்திட கோரியும், அரசியல் அமைப்பு சட்டத்தை பாது காத்திட கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் தென்னிந்தியா முழுவதும் இருந்து வரும் 16 மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் மாணவர் பேரணி நாளை மறுதினம் (1ம்தேதி) சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி நடைபெறுகிறது.

The post விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அழைப்பு ஆளுரை கண்டித்து சென்னையில் பேரணி திருவாரூரில் மாணவர் சங்கம் பிரச்சாரம் appeared first on Dinakaran.

Related Stories: