பைக் மோதியதில் தகராறு வாலிபரை தாக்கி செயின் பறித்த கும்பல்

 

கோவை, ஜன. 30: கோவையில் பைக் மோதியதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கி செயின் பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவை குனியமுத்தூர் சின்னசாமி பன்னாடி தெருவை சேர்ந்தவர் ரகுவரன் (38). இவர் கடந்த 27ம் தேதி தனது பைக்கில் கோபாலன் என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் அத்திப்பாளையம் ரோடு ஓம் சாந்தி நகர் ஜங்சனில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் பைக்கில் வந்த 2 பேர் ரகுவரனின் பைக் மீது மோதினர். இதில் கோபாலன் கீழே விழுந்தார்.

இதனால், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் போனில் பேசி மேலும் 2 பேரை அங்கு வரவழைத்தனர். பின்னர் 4 பேரும் சேர்ந்து ஹெல்மெட்டால் ரகுவரனை தாக்கினர். இதில் அவருக்கு மூக்கு, கை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து 4 பேரும் ரகுவரனை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க செயினை பறித்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து ரகுவரன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை தாக்கி செயின் பறித்த 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

The post பைக் மோதியதில் தகராறு வாலிபரை தாக்கி செயின் பறித்த கும்பல் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.