நாமக்கல் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், நாமக்கல் மேற்கு மாவட்ட கொமதேக பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நதி ராஜவேல் தலைமை வகித்தார். நகரச்செயலாளர் அசோக்குமார் வரவேற்றார். ராயல் செந்தில், சேன்யோ குமார், லாவண்யா ரவி, நந்தகுமார், தமிழ்செல்வன், வெங்கடாசலம், சாமி, அன்பு, பெரியசாமி, செல்வராஜ், தெய்வம் சக்தி, கேகேசி செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் எம்பி சின்ராஜ், மாநில விவசாய அணி இணை செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கொக்கராயன்பேட்டை காவிரி கரை ஓரத்தில், மண்டபம் அமைத்து அர்த்தநாரீஸ்வரருக்கு தீர்த்த வாரி விழா நடத்த வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

The post நாமக்கல் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: