வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பரியேறும்பெருமாள் பட இசைக்கலைஞருக்கு புதிய கருவிகள்

தூத்துக்குடி, ஜன.13: மழைவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பரியேறும் பெருமாள் பட இசைக்கலைஞருக்கு புதிய இசைக்கருவிகளை கனிமொழி எம்.பி. வாங்கிக் கொடுத்தார். இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில் எங்கும் புகழ் பாடலுக்கு பாடிய வைகுண்டம் புதுக்குடியை சேர்ந்த உருமி மேள இசைக்கலைஞர்களான முருகேசன், அவரது மருமகன் காளிதாசன் ஆகியோரின் இசைக்கருவிகள் சமீபத்தில் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த தகவலை அறிந்த கனிமொழி எம்.பி. அவர்களுக்கு புதிய இசைக்கருவிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தார். அதனைத்தொடந்து நேற்று தூத்துக்குடியில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் வைத்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., அந்த இசைக்கலைஞர்களுக்கு 1 நாதஸ்வரம், 2 தவில், ஒரு உருமி, ஒரு பம்பை மேளம் ஆகியவற்றை புதிதாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு திமுக மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பரியேறும்பெருமாள் பட இசைக்கலைஞருக்கு புதிய கருவிகள் appeared first on Dinakaran.

Related Stories: