பிஎச்டி படிப்பை வெளிநாடுகளில் தொடர கல்வி உதவித் தொகை

திருச்சி, மே 24: ஒன்றிய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் 2024-2025 ம் ஆண்டிற்கான முதுநிலை, பிஎச்டி மற்றும் முனைவா் ஆராய்ச்சி உயா் படிப்பை (NOS) வெளிநாடுகளில் தொடர தோ்ந்தெடுக்கப்படும் பழங்குடியின மாணாக்கா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள பழங்குடியினா் மாணாக்கா்கள் https:// overseas.tribal.gov.in மூலம் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமா்ப்பிக்க கடைசி நாள். மே.31 மேலும் விவரங்களுக்கு https:// overseas.tribal.gov.in அமைச்சகத்தின் போர்ட்டலைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தொிவித்துள்ளார்.

The post பிஎச்டி படிப்பை வெளிநாடுகளில் தொடர கல்வி உதவித் தொகை appeared first on Dinakaran.

Related Stories: