காமராஜர் பல்கலை பேராசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக, கணினி அறிவியல் துறைத்தலைவர் தங்கராஜ். இவர் மீது, அதே துறையில் படித்த மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். புகாரில், ‘‘மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், கடந்த 4 ஆண்டுகளாக கணினி அறிவியல் துறையில் பி.எச்டி படித்தேன். பின்னர் பல்கலைக்கழகத்தில் பயிற்சி ஆசிரியராக இருந்தேன். இதற்கிடையே சிவகாசியில் உள்ள கல்லூரியில் பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறிய தங்கராஜ், முன்னதாக நேர்காணலின் போது கல்லூரியில் வகுப்பு நடத்துவது எப்படி என கற்றுத்தருவதாக கூறி கடந்த 2023, நவம்பர் 14ம் தேதி என்னை அவரது அறைக்கு அழைத்தார்.

அங்கு வகுப்பு நடத்துவதற்கு பயிற்சி அளிப்பதாக கூறி என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து தங்கராஜ் மீது பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post காமராஜர் பல்கலை பேராசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: