தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நெல்லை சிறப்பு ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

நெல்லை: மேல்மருவத்தூர் தைப்பூச இருமுடி திருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை- நெல்லை- சென்னை வாராந்திர ரயில் மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்கிறது. அதன்படி மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயக்கப்படும் சென்னை – நெல்லை வாராந்திர ரயில் (06069) வரும் 29ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரையும், நெல்லை – சென்னை வாராந்திர ரயில் (06070) வரும் 28ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரையும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும். தைப்பூச திருவிழாவிற்கு செல்லும் பயணிகள் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

The post தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நெல்லை சிறப்பு ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் appeared first on Dinakaran.

Related Stories: