விருப்ப ஓய்வு பெற்ற நீதித்துறை ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக விருப்ப ஓய்வு பெற்ற நீதித்துறை ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என கடலூர் முதன்மை நீதிபதிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் தந்தை 53 வயதை கடந்து விட்டதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் மறுக்கப்பட்டது. பணி நியமனம் வழங்க மறுத்த கடலூர் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவை எதிர்த்து ஊழியரின் மகன் சதீஷ்குமார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விருப்ப ஓய்வு பெற்றபோது மனுதாரரின் தந்தைக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் பணிக்காலம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து நீதித்துறை ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

The post விருப்ப ஓய்வு பெற்ற நீதித்துறை ஊழியர் மகனுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: