சென்னை: சென்னை மழை, வெள்ள நிவாரண பணிகளுக்காக ஹூண்டாய் கார் நிறுவனம் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியது. புயல் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ தமிழ்நாடு அரசு கோரிக்கையை ஏற்று ஹூண்டாய் நிறுவனம் நிதியுதவி வழங்கியது. புயல், வெள்ள மீட்பு நடவடிக்கையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறியிருந்தது.